இரக்கமுள்ள கடவுளே, / ஏழைப் பாவியாகிய நான் உமக்கு முன்பாக விழுந்து, /உம்முடைய கிருபையையும் பொறுமையையுந் தேட வருகிறேன். / நான் மனத்தினாலும், வாக்கினாலும், நடக்கையி னாலும் / வெகுவிதமான பாவக்குற்றங்களைப் பண்ணினேன் என்று/ மனஸ்தாபப்பட்டு அறிக்கையிடுகிறேன். / ஆ, தயவுள்ள சுவாமி, / நான் நரகத்தில் அழிவது நியாயமாயினும், என்னை உம்முடைய சமூகத்தை விட்டுத் தள்ளாதேயும். / தேவரீர், என் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் பார்த்து, / நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து என்னை இரட்சியும். / நான் திரும்ப பாவஞ்செய்யச் சோதிக்கப்படும் போது, அதற்குச் சம்மதியாமல், அதை அருவருக்கவும், / உமக்குப் பிரிய மான பிள்ளையாக நடக்கவும், / பரிசுத்த ஆவியைக் கொண்டு எனக்குப் புத்தியையும், பலத்தையும் தந்தருளும். / இனி நான் சாகும் வேளையிலே / உம்முடைய மோட்ச இராஜ்யத்தில் சேருவதற்கு / என்னை ஆயத்தம் பண்ணியருளும், சுவாமி, ஆமேன்
பாவ அறிக்கை ஜெபம் – Confession of Sin
